கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் தீ விபத்து ; ஓட்டல் உரிமையாளர் பலி - மனைவி படுகாயம்

கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
கொடுங்கையூரில் கியாஸ் கசிவால் தீ விபத்து ; ஓட்டல் உரிமையாளர் பலி - மனைவி படுகாயம்
Published on

சென்னை கொடுங்கையூர் வடக்கு அவென்யூ மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 50). இவருடைய மனைவி மதீனா (44). இவர்கள் இருவரும் சேர்ந்து கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பகுதியில் துரித உணவகம் நடத்தி வந்தனர்.

கடந்த 8-ந் தேதி கணவன்-மனைவி இருவரும் கடையில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணவன்-மனைவி இருவரது உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. வலியால் அலறி துடித்தனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அலாவுதீன் நேற்று காலை பரிதாபமாக உயரிழந்தார். அவருடைய மனைவி மதினா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com