குமிழியம் கிராமத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

குமிழியம் கிராமத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
குமிழியம் கிராமத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
Published on

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மங்கையர்கரசி மானிய நடுநிலைப்பள்ளி மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பிரபாகரன் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி செந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான அழகானந்தம், தயாநிதி, சரவணன், சிங் பிரபாகரன், வெற்றிவேல், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகையை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால் நடத்தப்பட்ட தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை பார்த்து விழிப்புணர்வு அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com