புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை - தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை - தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Published on

சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இ்ங்குள்ள ஈ பிளாக் 8-வது மாடியில் வசித்து வருபவர் பால்ராஜ். நேற்று காலை இவரது வீட்டின் குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை கண்ட பால்ராஜ், இது குறித்து பேசின்பிரிட்ஜ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், பால்ராஜ் வீட்டுக்குள் புகுந்த ஆந்தையை பிடித்தனர். அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகையான நட்சத்திர ஆந்தை என்பது தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் பிடிபட்ட ஆந்தையை கிண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com