ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடையையும், பணிக்காலத்தில் இறந்தவர்கள் வாரிசுகளுக்கு தலா ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்களுக்கு பணிக்கொடை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருத்தணி, சுப்பிரமணியசுவாமி கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 கோவில் பணியாளர்கள் மற்றும் மறைந்த கோவில் பணியாளர் ஒருவரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு ரூ.2 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 752 பணிக்கொடை வழங்கிடும் அடையாளமாக 12 ஓய்வுபெற்ற கோவில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பணிக்கொடை வழங்கினார்.

மேலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியின்போது சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோரும், காணொலி காட்சியின் வாயிலாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com