வாக்காளர்களில் முதல் இடம் சோழிங்கநல்லூர், கடைசி இடம் துறைமுகம்!

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது
வாக்காளர்களில் முதல் இடம் சோழிங்கநல்லூர், கடைசி இடம் துறைமுகம்!
Published on

தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 51 ஆயிரம். மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரம். 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். 2-வது இடத்தில் ஆவடி தொகுதி உள்ளது. ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 772 வாக்காளர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது.

இங்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு முந்தைய இடத்தில், அதாவது கடைசிக்கு முந்தைய இடத்தில் எழும்பூர் தொகுதி இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 879 வாக்காளர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com