மாயனூரில் மீன் விற்பனை மந்தம்

மாயனூரில் மீன் விற்பனை மந்தமாக நடந்தது.
மாயனூரில் மீன் விற்பனை மந்தம்
Published on

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் காவிரியில் கதவணை உள்ளது. காவிரியில் சிலர் மீன்பிடித்து காவிரி கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் பல கடைகள் மாலை வரை வெறிச்சோடியே கிடந்தது. இந்தநிலையில் நேற்று நிலவரப்படி சிலேபி மீன் ஒரு கிலோ ரூ.130-க்கும், கட்லா ரூ.180-க்கும், கெண்டை ரூ.100-க்கும் விற்பனையானது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com