மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எதிரொலி: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

மீன்வளத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எதிரொலி: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
Published on

கடலூர் முதுநகர், 

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழக கடலோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்ததாக தெரிகிறது.

இதையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுக பகுதி சிறிய ரக பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் (அதாவது ஐ.பி. மற்றும் எஸ்.டி.பி. வகை விசைப்படகு மீனவர்கள்) மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

அதன் பேரில் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு, உடனடியாக கரைக்கு திரும்பி வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடலில் தங்கி இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். இதேபோல் கடலூர் துறைமுக பகுதி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுகம் பகுதி நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com