மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கீழமணக்குடியில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து காண்டார்.
மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தென்தாமரைகுளம், 

கீழமணக்குடியை சேர்ந்தவர் ஏசுஅந்தோணி (வயது58) மீனவர். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஏசு அந்தோணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற ஏசுஅந்தோணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com