கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

பெரியதாழையில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் இறந்து போனார்.
கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு
Published on

தட்டார்மடம்:

பெரியதாழையில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

மீனவர்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது நாட்டுப்படகில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 54) உள்ளிட்ட 3 மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்க சென்றார்.

அவர்கள் மீன்பிடித்து விட்டு தாமதமாக நேற்று மாலையில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெரியதாழை தூண்டில் பாலம் அருகில் படகில் வந்தபோது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் நிலைதடுமாறிய படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மதன் உள்ளிட்ட 3 பேரும் நீச்சல் அடித்து கரைக்கு தப்பி வந்தனர். அந்தோணிராஜ் கடலில் தத்தளித்தார்.

பரிதாப சாவு

இதனை அறிந்ததும் சக மீனவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தோணிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com