2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பலத்த சூறைக்காற்று காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

திசையன்விளை:

கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என்ற எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், பஞ்சல், தோமையர்புரம், கூட்டப்புளி, ஜார்ஜ் நகர், மிக்கேல் நகர் ஆகிய பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com