தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து- 5 பெண்கள் பலி

ஒட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து- 5 பெண்கள் பலி
Published on

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியான பெண்கள், நெல்லையில் இருந்து விவசாய பணிக்காக சென்றவர்கள் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்கள் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com