திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றம்

திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றம்
Published on

அரியலூர் நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் மகாபாரத கதை நடைபெற உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி திருக்கல்யாணமும், அதனைத்தொடர்ந்து சாமி திருவீதி விழாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்றும் கம்பத்திற்கு மஞ்சள், குங்குமம் தடவி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தென்பகுதி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com