தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை ராயபுரம் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை அகற்ற வேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு கிளை தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தனி நீதிபதி பிறப்பித்த அந்த உத்தரவை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அமர்வு, "மதுரை ஐகோர்ட்டு கிளை அளித்த காலக்கெடு ஏப்ரல் 21-ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் தமிழகம் முழுவதும் உள்ள பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com