மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 11-வது நாளாக குளிக்க தடை - பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி

தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

தென்மேற்கு பருவமழை

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த சில முன்பு தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதனிடையே, அம்பாசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 11வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் பார்ப்பதற்கு மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com