பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு

தீபாவளியைமுன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
Published on

பரமத்திவேலூர்:-

தீபாவளியைமுன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூக்கள் ஏல சந்தைகள்

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

விலை உயர்வு

கடந்த வாரம் நடந்த ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ130-க்கும், அரளி கிலோ ரூ.250-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லை கிலோ ரூ.1500-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com