அம்மனுக்கு பூச்சொரிதல்

அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது.
அம்மனுக்கு பூச்சொரிதல்
Published on

தாமரைக்குளம்:

அரியலூரில் செட்டி ஏரிக்கரையில் உள்ள வினை தீர்த்த மதுர காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை பக்தர்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு தாங்கள் வந்து கொண்டு வந்த பூக்களை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com