மகா காளியம்மனுக்கு பூச்சொரிதல்

மகா காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
மகா காளியம்மனுக்கு பூச்சொரிதல்
Published on

தாமரைக்குளம்:

அரியலூர் நகரில் கேப்ரியல் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பூச்சொரிதல் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் அரியலூர் செட்டியேரிக்கரையில் இருந்து பூக்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com