முகூர்த்த தினம்; பூக்கள் விலை உயர்வு - மதுரையில் மல்லிகை கிலோ ரூ.1,000 வரை விற்பனை

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகூர்த்த தினம்; பூக்கள் விலை உயர்வு - மதுரையில் மல்லிகை கிலோ ரூ.1,000 வரை விற்பனை
Published on

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய தினம் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு 600 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், இன்று 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதே போல் முல்லை மற்றும் பிச்சிப் பூக்கள் கிலோ 500 ரூபாய்க்கும், சம்மங்கி, பட்டன் ரோஸ் பூக்கள் கிலோ 150 ரூபாய்க்கும், செண்டு மல்லி 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com