3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

கூடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வனிதா (வயது 34). இவர்களுக்கு அபித்ஷா (12), அக்ஷிதா (10), அனுசியா (8) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வனிதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகனுக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வனிதா, தனது 3 பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார். தொடர்ந்து அவரும் விஷம் குடித்தார். இதில் வனிதாவும், அவரது குழந்தைகளும் வீட்டில் மயங்கியநிலையில் கிடந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com