கடல் அலையில் சிக்கி சாவு: 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கடல் அலையில் சிக்கி சாவு, 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடல் அலையில் சிக்கி சாவு: 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், மண்டைக்காடு புதூர் என்னுமிடத்தில் 16.6.2019 அன்று புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி சகாய ரெகின், இன்பென்டர் ரகீட், சச்சின் ஆகிய 3 சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com