தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
Published on

மதுரை,

தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

முன்னதாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடும் பணி நடைபெற்றது. 9 பணிகளுக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், 4 பணிகளுக்கு பணி ஆணை பெறாமல் வேலை நடக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்.28ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com