13-வது நாளாக பாதிப்பு குறைவு தமிழகத்தில் 329 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 194 ஆண்கள், 135 பெண்கள் உள்பட மொத்தம் 329 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
13-வது நாளாக பாதிப்பு குறைவு தமிழகத்தில் 329 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் 13-வது நாளாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 194 ஆண்கள், 135 பெண்கள் உள்பட மொத்தம் 329 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 83 பேர், செங்கல்பட்டில் 27 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தேனி மற்றும் திருப்பத்தூரில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 45 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 319 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com