போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு6 நாட்களில் ரூ.1½ லட்சம் அபராதம் விதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு 6 நாட்களில் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு6 நாட்களில் ரூ.1½ லட்சம் அபராதம் விதிப்பு
Published on

அபராதம்

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் கடந்த 12-ந்தேதி முதல் நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை சுங்கச்சாவடி, நான்கு ரோடு, துறைமங்கலம் மூன்று ரோடு ஆகிய பகுதிகளில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. அதில் போக்குவரத்து விதிகளை மீறிய 22 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.65 ஆயிரம் அபராதமும், இதர வாகனங்களில் அதிக பாரம், அதிக ஆட்கள் ஏற்றி செல்லுதல், ஒளிரும் பட்டைகள் இல்லாதது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.88 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள், வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கி விபத்துகளை தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறி இயக்கப்படும் வாகனங்களின் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com