முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை,

திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி ஆன நிலையில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களுக்கு அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com