முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ஆஜராகி, தங்கள் தரப்பில் இனி விசாரிக்க சாட்சிகள் யாரும் இல்லை என்று மனுதாக்கல் செய்தார். அதன் பிறகு, தன்னை ஒரு சாட்சியாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டை சாட்சியாக ஏற்று விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com