

செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, முதுகலை ஆசிரியர்கள் லதா, சண்முகவேலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழாசிரியர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.
செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 181 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், பசுபதி, ராமசாமி, ரவிசங்கர், மாரிமுத்து, கணேசன், முத்துக்குமார், அக்ரி முருகேசன், குமார், சஞ்சய் காந்தி மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.