

வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை மாணவ, மாணவியர்களுக்கு டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி வழங்கினார்கள்.
விழாவில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மதிமுக வாசு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மற்றும் திமுக, மதியம் மதிமுக கழக நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.