கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
Published on

இலவச பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. Staff selection Commission - CGL தோராயமாக 7,500 பணிக்காலியிடங்கள் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பணிக்காலியிடம் மற்றும் தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 3-ந்தேதி ஆகும். கணினி முறைத்தேர்வுகள் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் தொடங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

விருப்பமுள்ள...

இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04324-223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்அடங்கிய சுயவிவரத்தினை பதிவுசெய்து பயன்பெறலாம்.

மாணவர்கள் பயன்படுத்தி...

மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்விதொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஊக் கஉரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் இதன் மறுஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது, இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com