இலவச கண் சிகிச்சை முகாம்

கலவையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

வேலூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம், சென்னை அரவிந்த் மருத்துவமனை, அரிமா சங்கம் இணைந்து கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். முகாமிற்கு கலவை இன்ஸ்பெக்டர் காண்டியப்பன் தலைமை தாங்கி உரையாற்றினார். முகாமில் 441 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, லென்ஸ் பொருந்துதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் 136 பேர் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மணி தங்க மாளிகை சார்பில் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com