இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

கிணத்துக்கடவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
Published on

கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கல்லாபுரம், நெம்பர் 10முத்தூர், கோதவாடி, கோடங்கிபாளையம், அரசம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தாசில்தார் சிவகுமாரிடம் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தர வேண்டும் என மனு கொடுத்தனர். இதில் 90 பேர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இது குறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது :-

இலவச வீட்டு மனை பட்டா கேட்கும் நபர்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com