தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதிய சரக்கு லாரி - 8 பேர் படுகாயம்...!

வந்தவாசி அருகே தனியார் பஸ் மீது சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதிய சரக்கு லாரி - 8 பேர் படுகாயம்...!
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கூட்டுச் சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். 50 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

திருவண்ணாமலையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 38) என்பவர் ஓட்டி வந்து உள்ளார்.

வந்தவாசி அடுத்த வல்லம் கூட்டுச் சாலையில் பயணிகளை இறக்கி விடுவதற்காக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தி உள்ளார்.

அப்போது வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 6 பயணிகள், டிரைவர்கள் 2 பேர் என மொத்தம் 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com