பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நேற்று குறைக்கப்பட்டது. அதன்படி காலை 8 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 462 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com