மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறப்பு

மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறப்பு
Published on

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு மாலை 4 மணி நிலவரப்படி 1 லட்சத்து 96 ஆயிரத்து 301 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 4 பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு போக, மீதம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கன அடி தண்ணீர் அப்படியே காவிரியில் 98 மதகுகளின் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கரையோர மக்கள் காவிரியில் இறங்கவோ, குளிக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com