தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு

கடமலைக்குண்டு அருகே தடுப்பச்சுவரில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த வியாபாரி சாவு
Published on

ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது 60). இவர், கடமலைக்குண்டு பகுதியில் சில்லறை முறையில் எண்ணெய் விற்பனை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி தமிழன், வியாபாரத்தை முடித்துவிட்டு கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் இடையே வைகை ஆற்றங்கரை ஓரம் உள்ள தடுப்புச்சுவரில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழ விழுந்தார். இதில் பின்கழுத்தில் அடிப்பட்டதில் அவருக்கு கை, கால்கள் செயலிழந்தது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தமிழன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com