உள்ளூர் முதல் உலகம் வரை நிமிடத்திற்கு நிமிடம் சிறப்பு செய்திகள்...

உள்ளூர் முதல் உலகம் வரை நிமிடத்திற்கு நிமிடம் சிறப்பு செய்திகள்...

2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4000 சிறப்பு நிதியாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ப.சிதம்பரம் வீட்டில் செல்வப்பெருந்தகை ஆலோசணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தி வருகிறார்

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப. சிதம்பரம் சற்று நேரத்தில் சந்திக்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை - விஜய் தேவரகொண்டா அறிவிப்பு

தெலுங்கானா மாநிலம் மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட்டைக்கு அருகே உள்ள தனது மூதாதையர் கிராமமான தும்மல் பேட்டாவிற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மனைவி ராஷ்மிகாவுடன் நேரில் சென்று கிராம மக்களை சந்தித்தார். புதிதாக திருமணம் ஆன ஜோடியை நேரில் பார்த்த மக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது அவர் பேசுகையில், “என் கிராமத்திற்கு வந்து என் கிராமத்தில் உள்ள அனைவரையும் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனவும், இனிமேல் என் கிராமத்திற்கு நாங்கள் தொடர்ந்து வருவோம். இந்த ஆண்டு முதல், அச்சம்பேட்டை தொகுதியில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்கப்படும்“ என்று அவர் அறிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் இந்த அறிவிப்பு, கல்வி உதவி எதிர்பார்த்திருந்த மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்பு

இன்று பகல் 12.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

திமுக - காங்கிரஸ் இடையே நடந்த முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

நாங்குநேரி கொலை வெறி தாக்குதலுக்கு கண்டனம் - விஜய்

நெல்லை நாங்குநேரியில் டீக்கடை அருகே நடந்த கொலை வெறி தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது,சாலையில் சென்றவர்கள், கடை அருகே நின்றவர்கள் மீது 9 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல்;உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?போதைக்கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?இந்தியாவின் டாப் மாநிலத்தில் டிஜிபி எங்கே? நம்பர் 1 மாநிலம் எனக் கூறும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு இதுதானா?மக்கள் நலன்களை, பாதுகாப்பை துளியும் யோசிக்காத திமுக ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்

நாங்குநேரி சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நாங்குநேரி அருகே அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம், வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணி நிகழ்கிறது சந்திர கிரகணம்

இன்று(மார்ச் 3) பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

தமிழ்நாட்டில் பகுதியளவே தெரியும் எனவும், வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் வானியல் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ.2,000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 மற்றும் பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4000 சிறப்பு நிதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பல்வேறு தரப்பினர் நம்பிக்கையுடன் வைத்த கோரிக்கை நிறைவேற்றம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன் பெறுபவர்களுக்கு இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றி மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து சிறப்பு நிதியாக ரூ.2000 வரவு வைத்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com