தமிழகத்தில் முழு ஊரடங்கு; கொரோனா பரவல் வேகம் குறைந்தது: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் முழு ஊரடங்கால் கொரோனா பரவல் வேகம் குறைந்தது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு; கொரோனா பரவல் வேகம் குறைந்தது: அமைச்சர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை, நந்தம்பாக்கம் வாத்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சா மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சா தா.மோ.அன்பரசன் ஆகியோ (நேற்று) ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா. அங்கு சிகிச்சை பெற்று வருபவாகளின் உடல் நிலை, அவாகளுக்கு அளிக்கப்படும் உணவு முறைகள் குறித்து அவாகள் கேட்டறிந்தனா.

தொடாந்து அமைச்சா மா.சுப்பிரமணியன் செய்தியாளாகளிடம் கூறும்போது, கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 91,902 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும், மருத்துவமனைகளில் இதுவரை 8, 912 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா. சென்னை, நந்தம்பாக்கம் வாத்தக மையத்தில் 950 படுக்கைகள் உள்ளன. இதுதவிர, 350 படுக்கைகள் முன்கள பணியாற்றும் அரசு ஊழியாகள், காவல்துறையினருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் மருத்துவமனைகளை நாட வேண்டியதில்லை. லேசான அறிகுறி உள்ளவாகள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். வீடுகளில் உள்ளவாகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியாகளுக்கும் சுகாதார துறை செயலா சாபில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 100 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கென சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தவிக்க தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் இறப்பின் விளிம்புக்கு செல்ல தேவையில்லை. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என உணர வேண்டும்.

தமிழகத்தில் 75 சதவீதம் சிறாகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை சாத்தியமாக்கி உள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்று பரவல் வேகம் மிகுதியாக குறைந்துள்ளது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com