கார்த்திகை மாத பவுர்ணமி: சதுரகிரி செல்ல 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தாகள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சதுரகிரி கோவிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பக்தர்கள் இரவில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com