பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது

கோவில்பட்டியில் மதிய நேரத்தில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பர்னிச்சர் கடை அதிபர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராஜையா மகன் சந்திரசேகர் (வயது 54). இவர் கோவில்பட்டி கடலையூர் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சிந்தாமணி நகரில் உள்ள இவரது வீட்டிற்கு அருகே, இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த வீட்டில் கணவனை இழந்த 42 வயதுள்ள பெண் தனது 2 குழந்தைகளுடன் வாடகைக்கு இருந்து வருகிறார்.

கடந்த 4ம்தேதி மதியம் அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட சந்திரசேகர், வீட்டுக்குள் நுழைந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்ததுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை அவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com