பான்-ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பான்-ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
Published on

சென்னை,

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com