கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின் வினியோகம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கின

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மின் வினியோகம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. குடிநீர் மோட்டார்களை இயக்குவதற்கு ஜெனரேட்டர் வாடகையாக அதிக பணம் கேட்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின் வினியோகம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கின
Published on

திருவாரூர்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு கோரத்தாண்டவம் ஆடியது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் அடித்த காற்றில் ஆயிரக்கணக்கான குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com