காந்தி ஜெயந்தி விழா

சங்கரன்கோவிலில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
காந்தி ஜெயந்தி விழா
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் உள்ள காந்தாரியம்மன் கோவில் முன்பு கஸ்பா வணிக வைசிய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சங்கர் கோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு காந்திஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் சங்கத் துணைத் தலைவர் ஓம் சக்தி, துணைச் செயலாளர் சக்திவேல் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மாரியப்பன், சுடலை சங்கர், அய்யனார், சண்முகவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com