விநாயகர் சிலைகள் அமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தீயணைப்பு, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்தும் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.
சென்னை ,
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது
அதன்படி,
*விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசு துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்தும் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.
* விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
*பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
*சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
*விநாயகர் சிலைகளை காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.
*விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






