சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

சிதம்பரம் முத்துமாணிக்கம்நாடார் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (வயது 30). இவர் கடந்த 26.9.2023 அன்று தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபேது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.850-யை வழிப்பறி செய்து சென்று விட்டனர்.

இது பற்றி மணிகண்டன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மந்தாரக்குப்பம் பெரியாக்குறிச்சி புதுநகர் சின்னசாமி மகன் கலைவாணன் (22), நிதீஷ்குமார் (23), சூர்யா (23) ஆகிய பேர் என்று தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர்மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் கலைவாணன் மீது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், கடலூர் முதுநகர், புவனகிரி, சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கு என 6 திருட்டு வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் கலைவாணனை சிதம்பரம் நகர பேலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com