ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல்: பிரபல ரவுடி கைது

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடர்ந்து கஞ்சா கடத்தப்படுவதாகப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ரெயில்வே போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
கஞ்சா கடத்திய ரவுடி கைது.
ரவுடி- கார்த்திக்
Published on

சென்னை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்த மதுரை பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளியான கார்த்திக், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டான்.

ரகசிய தகவல்

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி என்பவரின் முக்கிய கூட்டாளியாகச் செயல்பட்டு வருபவன் கார்த்திக். இவன் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடர்ந்து கஞ்சா கடத்தப்படுவதாகப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ரெயில்வே போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

கைது- பறிமுதல்

இதனைத் தொடர்ந்து சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து வந்த ரெயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார்த்திக்கை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவன் விற்பனைக்காகக் கொண்டு வந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கைக் கைது செய்தனர். மேலும் இவருக்குப் பின்னால் உள்ள கஞ்சா கடத்தல் கும்பல் மற்றும் நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com