சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
Published on

அருப்புக்கோட்டை புறவழிச்சாலை சாய்பாபா கோவில் அருகே இருந்து காந்திநகர் செல்லும் சர்வீஸ் சாலை ஓரமாக திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கழிவு மீன்களையும், இறைச்சிகளையும், அங்குள்ள உணவகங்களில் வீணாகும் இலைகளையும் சிலர் கொட்டுகின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி அங்கு குப்பைகள் கொட்டாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com