தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர்... ரெயிலில் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சோகம்

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற முயன்றபோது கேட் கீப்பர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

ரெயிலில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்ற முயன்றபோது கேட் கீப்பர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பாற்ற முயன்றபோது விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் கோபுராஜபுரம் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் (30) பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ரெயிலில் தற்கொலைக்கு முயன்ற நபரை பார்த்த ராகுல், அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் விபத்தில் சிக்கினர். இதையடுத்து, இருவரும் ரெயிலில் சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரெயில்வே போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com