பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும்

பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என மனு அளித்தனர்.
பொது சிவில் சட்டத்தை எதிர்க்க வேண்டும்
Published on

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி.யை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட தலைவர் அப்துல் மகாத் தலைமையில் சந்தித்து அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கொடுத்த கடிதத்தை வழங்கினர். அந்த கடிதத்தில் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா வரும் போது அனைத்து கட்சி எம்.பி.களும் அதனை எதிர்க்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. உறுதியாக காங்கிரஸ் கட்சி அதனை எதிர்க்கும் என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com