பெண் மர்ம சாவு

பெண் மர்மமான முறையில் இறந்தார்.
பெண் மர்ம சாவு
Published on

முசிறி:

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த எம்.புதுப்பட்டி சிலோன் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மனைவி சாரதா(வயது 55). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து சாரதா, தனது கணவர் ராமகிருஷ்ணனின் தம்பி அருள் என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மன பிரம்மை பிடித்தது போல் ஆங்காங்கே நடந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை வீட்டில் இருந்த அவரை, பின்னர் காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை எம்.புதுப்பட்டியில் குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்தில் சாரதா பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அயித்தாம்பட்டியை சேர்ந்த ராமராஜன் என்பவர், அது பற்றி சாரதாவின் மகன் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து முசிறி போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாரதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சாரதா எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com