

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 26). இவர் நெல்லையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போச்சோ சட்டத்தின் கீழ் சதாம் உசேனை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.