சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் ஜெயப்பிரியா (வயது 17). நேற்று சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றாள். இதையறிந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுதொடர்பான புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com